வேலூர், ஏப். 9: வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதியில் 8 ஆயிரத்து 50 தபால் வாக்குகள் பதிவு செய்து வந்துள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இதர தேர்தல் பணியாளர்கள், வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்களிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் பாதுகாப்பு படையில் பணிபுரியும் வீரர்கள் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி மொத்தம் 20 ஆயிரத்து 61 தபால் வாக்குகள் சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.