வேலூர், ஏப்.8:வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து பேராசிரியையை கத்தியால் குத்தி நகை பறித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே உள்ள நரசிங்காபுரத்தைச் சேர்ந்த குணசேகரனின் மனைவி புவனேஸ்வரி(48), கல்லூரி உதவி பேராசிரியை. இவரது வீட்டில் ஒரு பகுதி வாடகைக்கு உள்ளது என்று போர்டு வைத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம், உதவி பேராசிரியை புவனேஸ்வரி வீட்டிற்கு, கீழ்விஷாரத்தைச் சேர்ந்த தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரியும் நாகூர்மீரான்(36) சென்றுள்ளார். அவர் வீடு வாடகைக்கு உள்ளதா? எவ்வளவு வாடகை என்று கேட்பது போல் நடித்து, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, புவனேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுக்கும்படி மிரட்டியுள்ளார்.