×

நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் – எதிர்க்கட்சி தலைவரை கைது செய்து முடக்க விஜய் அரசு திட்டம்.!!

சென்னை: காவிரி – மேகதாது விவகாரத்தில் வாயை மூடி வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் மற்றும் வெக அரசை கண்டித்து நேற்று தஞ்சையில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் உட்பட தவெக அரசு அலட்சியம் காட்டும் பல மக்கள் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புவோம், சும்மா விட மாட்டோம் என்று உதயநிதி நேற்று தெரிவித்திருந்த நிலையில், இன்று அவரது நீலாங்கரை வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போலீசார் அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

காவிரி நீர் பிரச்சனையை திசை திருப்ப தவெக அரசு முயற்சிப்பதாகவும், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவரை சட்டமன்றத்திற்கு வரவிடாமல் தடுக்க விஜய் அரசு முயற்சிப்பதாகவும் திமுக உட்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். எதிர்க்கட்சி தலைவரை கைது செய்வதன் மூலம், பிரச்சனையை திசைதிருப்பி காவிரி விவகாரத்தில் தனது தோல்வியை மறைக்க விஜய் அரசு முயற்சிப்பதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

Tags : Vijay Government ,Chennai ,Kaviri ,Dimuka ,Tanji ,Vijay ,Veka government ,Megadadu ,Adyanid Stalin ,
× RELATED எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு...