புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரம், மேற்காசிய நிலவரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, திரவ எரிவாயு,உரங்களின் உள்நாட்டு இருப்பு மற்றும் குறுகிய கால அல்லது நீண்ட கால விநியோகங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் சண்டை நடக்கும் இடங்களில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
