×

டெங்கு நோய் பரவலா? மருத்துவமனையில் 3 குழந்தைகள் சிகிச்சைக்கு திடீர் அனுமதி

 

அன்னூர், ஜூலை 29: அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு பகுதியில் உள்ள உப்புதோட்டம் பகுதியில் சுகாதார சீர்கேடாக குப்பை அதிகமாக உள்ளது. இவை பேரூராட்சி நிர்வாகத்தால் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. குப்பைகளை அப்புறப்படுத்த கோரி வார்டு பொதுமக்கள் அன்னூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தனர். மேலும் இங்கு குவிந்துள்ள குப்பை மற்றும் வடிகால் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக நோய் தொற்று ஏற்படுவதாக அன்னூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போது டெங்கு பாதிப்பால் 3 குழந்தைகள டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் பரவியது. இதையடுத்து 3 பேரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : Upputhottam ,Ward 7 ,Annur ,Panchayat ,Panchayat administration ,Annur Panchayat administration ,
× RELATED கோவை கிழக்கு புறவழிச்சாலைக்கு ஆதரவு:...