திண்டுக்கல்: பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.2 கோடிக்கு முறைகேடாக வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு முறைகேடு தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழனி நில மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது
