முதல்கட்டமாக நடந்த குஷா ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: ரஷ்யாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புக்கு இணையாக குஷா நீண்ட தூர ஏவுகணை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, போர் விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் பெரிய எதிரி விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்கும் திறன் கொண்டது. தரையிலிருந்து வானில் நீண்ட தூர இலக்கை தகர்த்து அழிக்கக் கூடியது.

இத்தகைய குஷா ஏவுகணைகளின் முதல்கட்ட சோதனையை ஒடிசாவின் ஏபிஜே அப்துல்கலாம் தீவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் நேற்று நடத்தப்பட்டது. இதில், அதிவேகம் மற்றும் அதி உயரத்தில் இருந்த வந்த வான்வழி அச்சுறுத்தலைப் போன்று செயல்படும் மின்னணு இலக்கை குஷா ஏவுகணை அமைப்பு துல்லியமாக இடைமறித்து அழித்ததாக பாதுகாப்பு அமைச்சக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: