விழுப்புரம், ஜூலை 17: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலிலில் வரும் 29ம் தேதி பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
விழுப்புரத்தில் இருந்து 29ம் தேதி காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும். எதிர் வழித்தடத்தில் அதே நாளில் திருவண்ணமலை ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும், என கூறப்பட்டுள்ளது.
