×

தூய்மைப்பணி மேற்கொண்ட கவுன்சிலர்கள்

 

உசிலம்பட்டி, ஜூலை 9: உசிலம்பட்டி நகராட்சியின் 7வது வார்டு பூக்கார தெருவில், கடந்த சில வாரங்களாக கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து நேற்று அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் கலாவதி, ராமகிருஷ்ணன், பூமாராஜா உள்ளிட்டோர் கழிவுநீர் கால்வாய்களில் தூய்மை பணிகள் மேற்கொண்டனர். தகவலறிந்த நகராட்சி துணைத்தலைவர் தேன்மொழி, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உத்தரவின்படி, கால்வாய் தூய்மை பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

 

Tags : Usilampatti ,Ward 7, Pookkara Street ,Usilampatti Municipality ,AIADMK Nagar… ,
× RELATED உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42...