சென்னை: செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் பழைய இரும்பு தரம் பிரிக்கும் கடையில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் (26) என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த 4ம் தேதி லாரியில் படுத்து உறங்கியபோது, கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
