×

ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக 5ம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த துணிச்சலை நினைத்து பெருமை கொள்கிறேன்: இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக ‘திராவிடமணி’ இரட்டைமலை சீனிவாசன் வட்ட மேசை மாநாட்டில் ஓங்கி ஒலித்த லண்டனில் இருந்து அவரது பிறந்த நாளில் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

நம் மண்ணில் தீண்டத் தகாதவர்களென ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய போராளியான தாத்தா இரட்டைமலையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஓட்டேரி மயானபூமி அமைந்துள்ள பிரிக்ளின் சாலைக்கு “இரட்டைமலை சீனிவாசன் சாலை” என திராவிட மாடல் ஆட்சியில் பெயர் சூட்டி திறந்து வைத்ததையும் பெருமையோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : King George V ,DMK ,President MK Stalin ,Dwettamala Srinivasan ,Chennai ,President ,MK Stalin ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர், இரட்டை இலை...