ஓமலூர் தொகுதியில் 100% வாக்குப்பதிவு குறித்து மாணவிகள் விழிப்புணர்வு

ஓமலூர், மார்ச் 9:சட்டமன்ற தேர்தலையொட்டி, 100சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஓமலூர் அருகே நடந்தது. ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில், பொதுமக்களுக்கு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், வாக்காளர்கள் 100சதவீதம் வாக்களிப்போம் என்று உறுதியேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 100சதவீதம் ஓட்டு மை, வாக்களிப்பது நமது பெருமை என விழிப்புணர்வு பலகை வைக்கபட்டு இருந்தது. இதன் மையத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் முதல் நபராக நின்று விரலை காட்டி துவக்கி வைத்தார். தொடர்ந்து வாக்காளர் உறுதிமொழியை மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாப்ரியாவும் விழிப்புணர்வு பலகையின் கட்டத்திற்குள் நின்று விரலை காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: