வீட்டிற்கு தெரியாமல் நகையை அடகு வைத்த தொழிலாளி தற்கொலை

தர்மபுரி, மார்ச் 9: பாலக்கோடு பூமத்தனஅள்ளியை சேர்ந்தவர் முருகன் மகன் பெரியசாமி (24), கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், பெரியசாமி கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டில் இருந்த 10 பவுன் நகையை, யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று அடமானம் வைத்து செலவு  செய்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அடகு வைத்த நகைக்கான அசல், வட்டி கட்ட சொல்லி, அவரது வீட்டுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுபற்றி விசாரித்த போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த பெரியசாமி வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: