காஞ்திபுரம்: சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி 100 சதவீத வாக்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கோலப்போட்டியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம், திட்ட அலுவலர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி 100 சதவீத வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்கு பல விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் பேரணிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கோலப் போட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.