காஞ்சிபுரம்: தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓமன் நாட்டில் இருந்து திரும்பி வந்தபோது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் கொரோனா பாதிப்பால் 499 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் முதலில் கொரோனா பாதிப்பு காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஒமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் வருகை தந்தபோது தொற்று உறுதியானது இதனை தொடர்ந்து அவருடைய உறவினர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தினர். சரியாக கடந்த ஒரு ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 லட்சத்தும் அதிகமானோர்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.