கலெக்டர் தகவல் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பெல் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி வசதி தொழிற்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

திருச்சி, மார்ச் 9: பெல் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என ஏஐடியூசி சங்கத்தினர் திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி திருச்சி பெல் முதன்மை மருத்துவமனையில் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து தரக்கோரியும், பெல் டவுன்ஷிப் குடியிருப்பு பகுதியில் மாடுகள் சுற்றித்திரிந்து பெரும் விபத்துகளையும் மனிதர்களுக்கு படுகாயங்களையும், ஏற்படுத்தி வருவதை தடுக்கக் கோரி திருச்சி பெல் டிடிஎஸ்-ஏஐடியூசி சங்கத்தினர் தலைவர் நடராஜா தலைமையில், ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது பொதுச்செயலாளர் சங்கர், துணைத் தலைவர் கணேஷ், மருத்துவக் குழு உறுப்பினர் பழனி, பொருளாளர் கைலாஷ்நாத், பணிக்குழு உறுப்பினர் தீனதயாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: