கடைசி வேலை நாளில் ஓய்வூதியம் பெற உறுதி அரசுக்கு சங்கத்தினர் வலியுறுத்தல்

திருச்சி, மார்ச் 9: ரங்கம் வட்ட ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஓய்வூதியம் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தபிறகு ஓய்வூதியர்கள் கடைசி வேலை நாளில் ஓய்வூதியம் பெறுவது கேள்விக்குறியாக உள்ளது. தொகுப்பூதியம் முடிவு, கூடுதல் ஓய்வூதியம் பெறுதல், புதிய குடும்ப ஓய்வூதியம் பெறுதல் ஆகியவைகளுக்கான நிலுவை தொகைகளை பெறுவதில் காலதாமதமாகிறது. கடைசி வேலை நாளில் ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்தும், நிலுவை தொகையினை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: