அடையாளம் தெரியாத வாலிபர் ரயிலில் அடிபட்டு பலி

கரூர், மார்ச் 9: கரூர்-சேலம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்புறம் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர்-சேலம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த பாலத்தின் கீழ்ப்பகுதியில் நேற்று அதிகாலை 35 வயதுடைய ஆண் ஒருவர் கால் சிதைந்த நிலையில் இறந்து கிடப்பதாக இந்த பகுதியினர் கரூர் ரயில்வே நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார், அடையாளம் தெரியாத நிலையில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: