வளையக்காரன்புதூர் பிரிவு சாலையில் நிழற்குடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூர், மார்ச் 9: கரூர் மாவட்டம் திருச்சி பைபாஸ் சாலை வளையக்காரன்புதூர் பிரிவு அருகேயுள்ள நிழற்குடை சீரமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் திருச்சி சாலையில் மணவாசி டேல்கேட் முன்பாக வளையக்காரன்புதூர் பகுதிக்கான சாலை பிரிகிறது. இதன் எதிரே, மக்கள் இந்த சாலையின் வழியாக கிராமப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறிச் செல்லும் வகையில் நிழற்குடை அமைத்து தரப்பட்டது. இதற்கான பணிகள் அரைகுறையாக மட்டுமே செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இருக்கைகள் வைத்து, புதுப்பித்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் நிழற்குடையை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நிழற்குடையை சீரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: