×

மர்ம நபர்கள் துணிகரம் மொபட்டில் வைத்த ₹65 ஆயிரம் திருட்டு

சேத்துப்பட்டு, மார்ச்9: மொபட்டில் வைத்திருந்த ₹65 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சேத்துப்பட்டு அடுத்த ராஜமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, இவரது மனைவி சுமதி(36). இவர் பணத்தேவைக்காக நேற்று தன்னுடைய நகையை செஞ்சி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்து பணத்தை வாங்கி பையில் வைத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து, தன்னுடைய மொபட் சீட் அடியில் உள்ள பகுதியில் பணத்தை வைத்து, போளூர் சாலையில் உள்ள ஒரு நகை அடகு கடையில், அடகு வைக்கப்பட்ட நகையை திரும்ப பெறுவதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த தனது உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர், அடகு கடைக்கு செல்வதற்காக தன்னுடைய மொபட்டில் உள்ள சீட்டை திறப்பதக்காக சென்றார். அப்போது சீட் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து திறந்து பார்த்தார். அதில் வைத்திருந்த ₹65 ஆயிரம் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சுமதி சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து ₹65 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்.

Tags :
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...