திருவண்ணாமலை, மார்ச் 9: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்களுடன் வந்த பொதுமக்கள், அங்கிருந்த பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது, இந்த தகவல் தெரியாமல், கோரிக்கை மனுக்களுடன் நேற்று 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டதை தெரிவித்தனர். எனவே, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில், கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.