வேலூர், மார்ச் 9: வேட்புமனு தாக்கல் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை என்ன என்பது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு நேற்று டிஆர்ஓ பார்த்தீபன் தலைமையில் பயிற்சி நடந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12 ம் தேதி தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை 20ம் தேதியும், 22ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்காக ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை குறித்த பயிற்சி நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டிஆர்ஓ பார்த்தீபன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியதாவது: