வீட்டு சுவரில் கட்சி சின்னம் வரைந்தவர் மீது வழக்கு

குடியாத்தம், மார்ச் 9: குடியாத்தம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக்மன்சூர் உத்தரவின்பேரில் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடியாத்தம் அடுத்த கூடல்நகரம் பகுதியில் அனுமதியின்றி தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஒரு வீட்டில் கட்சி சின்னம் வரைந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து எஸ்பி செல்வகுமார் உத்தரவின்பேரில், குடியாத்தம் போலீசார், சின்னம் வரைந்த மகேந்திரன்(63) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: