சாராயம் விற்ற 3 பெண்கள் கைது

குடியாத்தம், மார்ச் 9: குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பதாக குடியாத்தம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி தரன் உத்தரவின்பேரில் தாலுகா எஸ்ஐ பெருமாள் மற்றும் போலீசார் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள புதரில் அதே பகுதியை சேர்ந்த புஷ்பா(39), ஜெயா(38) ஆகியோர் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். இதேபோல் அணைக்கட்டு போலீஸ் எஸ்ஐ ரவி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அணைக்கட்டு அடுத்த ரெட்டியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மலையடிவாரத்தில் பாட்டிலில் அடைத்து சாராயம் விற்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த மல்லிகா(30) என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: