ஈரோட்டில் 10 பேருக்கு கொரோனா

ஈரோடு,மார்ச்9:  ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதியதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 14,884 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நேற்று 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து இதுவரை மொத்தம் 14,651 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மருத்துவமனைகளில் 83 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொரோனா தொற்றினால் மாவட்டத்தில் இதுவரை 150 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: