மன்னார்குடி, மார்ச் 8: தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமி உத்தரவின் பேரில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்த தென்வடல் காகித பட்டறை தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்தீபன் (61), கூட்டுறவு பால் வழங்கும் சங்க அலுவலகம் முன் பிளக்ஸ் வைத்திருந்த சேரன்குளம் அதிமுக பிரமுகர் சுப்பிரமணியன் (58), சிங்கன்குளம் பகுதியில் பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்த திமுக பிரமுகர் இளங்கோவன் (66) ஆகிய 3 நபர்கள் மீது டவுன் எஸ்ஐ முருகன் வழக்கு பதிவு செய்தார்.