அரவக்குறிச்சி பகுதியில் ஒரு மாதத்திற்கு பிறகு சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கு விற்பனை

அரக்குறிச்சி, மார்ச் 8: அரவக்குறிச்சி பகுதியில் சின்ன வெங்காயம் விலை ஒரு மாதத்திற்குப் பிறகு குறைந்து கிலோ ரூ 50 க்கு விற்பனையாகின்றது. .விலை உயர்வினால் சமையலுக்கு சுவை சேர்க்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நடுத்தர வர்க்க இல்லத்தரசிகள் நிம்மதியடைந்தனர்.. அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்பப்படும் சின்ன வெங்காயத்தின் தேவை அதிகமாகஇருக்கும். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சிறிய வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது. சென்ற மாதங்களில் ரூ 50க்கு விற்றது, அதிக விலையாக ரூ.200 முதல் 250 வரை விற்பனையாகிறது. அரவக்குறிச்சி பகுதியிலுள்ள காய்கறி வியாபாரிகள் கரூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ஊர்களிலுள்ள மொத்த வியாபாரிகளிடமிருந்து வாங்கி வந்து இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட சில்லறை காய்கறி கடையில் விற்பளை செய்கின்றனர்.

மழையின் காரணமாக மொத்த வியாபாரிகளுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்ததால் கொள்முதல் விலையே அதிகமாக உள்ளதால் சில்லரையிலும் அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை உள்ளது என்று இப்பகுதி சில்லரை காய்கறி வியாபாரிகள் கூறினர். இந்த விலை உயர்வு மார்ச் மாதம் கடைசி வரை நீடிக்கும் என்று கூறப்ப்ட்டது. இந்நிலையில் கரூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ஊர்களிலுள்ள மொத்த வியாபாரிகளுக்கு வெளி மாநிலங்களிலிருந்து சிறிய வெங்காயம் வரத்து அதிகரித்தது.இதனால் மொத்த வியாபாரிகளிடம் விலை குறைந்ததால் சில்லரை வியாபரிகளிடமும் விலை குறைந்து அரவக்குறிச்சி பகுதியில் சிறிய வெங்காயம் விலை .கிலோ ரூ 50 க்கு விற்பனையாகின்றது. இதன் காரணமாக விலை உயர்வினால் சமையலுக்கு சுவை சேர்க்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நடுத்தர வர்க்க இல்லத்தரசிகள் நிம்மதியடைந்தனர்.

Related Stories: