விலை குறைவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி பனையம்பாளையத்தில் கடனை திரும்ப கேட்க வந்த வங்கி ஊழியர் -விவசாயி இடையே தகராறு

க.பரமத்தி, மார்ச்.8: அரவக்குறிச்சி தாலுகா கூடலூர் கிழக்கு ஊராட்சி பனையம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்கிற விவசாயி கரூரில் ஒரு வங்கியில் கடந்த 2014ம் ஆண்டு வேளாண் மேம்பாட்டுகாக கடன் பெற்றிருந்தார். இந்த கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தி பலமுறை வங்கி ஊழியர்கள் மதன்குமார்(29) உள்ளிடடோர் கேட்டுள்ளனர். இந்நிலையில் கடனை வசூலிக்க வந்த வங்கி ஊழியர் நேரில் வந்து கடனை திருப்பி செலுத்தும்படி கூறியபோது வங்கி ஊழியருக்கும்  ராமசாமி மற்றும் அவரது மகன் ராஜ்குமாருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ராஜ்குமார் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சி்ன்னதாராபுரம் காவல்நிலையத்தில் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் வங்கி ஊழியர் மீதும், இதே போல வங்கி ஊழியர் மதன்குமார் கொடுத்த புகாரின் பேரில் தந்தை, மகன் மீது என இரண்டு வழக்குகளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: