வீட்டை புதுப்பிக்க பணம் கிடைக்காததால் விரக்தி தனியார் நிறுவன மேலாளர் கிணற்றில் விழுந்து தற்கொலை

கரூர், மார்ச். 8: கரூர் வெங்கமேடு அருகே மனஉளைச்சல் காரணமாக தனியார் நிறுவன மேலாளர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் வெங்கமேடு விவிஜி நகரைச் சேர்ந்தவர் குமார்(40). இவர், தனியார் கொசுவலை நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.இவர், தான் குடியிருக்கும் வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் வீட்டை புதுப்பிக்க கூடுதல் செலவாகும் என்பதால் பணம் கிடைக்காமல் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்றவர் மறுநாள் காலை வீடு திரும்பவில்லை. இந்நிலையில், உறவினர்கள் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, அருகம்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள ஒரு கிணற்றில் குமார் இறந்த நிலையில் மிதந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: