செய்துங்கநல்லூர், மார்ச் 8: வைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மூலம் வாக்கு பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு நடந்தது. வைகுண்டம் வட்டம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் வைகுண்டம் தாசில்தா௫மான கோபாலகிருஷ்ணன், ஆலோசனையின்படி செய்துங்கநல்லூர் குறுவட்டம் சேரகுளம் கிராமம் ராமானுஜம் புதூர் மற்றும் தெற்கு காரசேரியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் இருதயமேரி, தலைமையில் கிராம மக்களிடம் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மூலம் வாக்கு பதிவு செய்வதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அனைத்து வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது கட்டாயம் என்பது குறித்து பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பாண்டிபெருமாள், ஆனந்த் ஏகமூர்த்தி, கிராம நிர்வாக உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.