தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புகார் தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை கலெக்டர் தகவல்

கரூர், மார்ச். 8: கரூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் தெரிவிக்க விரும்பினால் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1950 மற்றும் 18004255451 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், 9498747703 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். வரப்பெறும் புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: