தோட்டத்தில் மின் மோட்டார் திருட்டு

சாத்தான்குளம், மார்ச் 8: சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் மின் மோட்டார் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சண்முகவேல் (40). இவர் அம்பாசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது தோட்டம் அமுதுண்ணாக்குடியில் உள்ளது. இவரது தோட்டத்தில் இருந்த மின்மோட்டாரை மர்மநபர் திருடிச்சென்று விட்டார். அதன் மதிப்பு ரூ 35ஆயிரம் ஆகும். இதுகுறித்து சண்முகவேல் சாத்தான்குளம் போலீசில் புகார்  செய்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ சத்தியபாமா வழக்குபதிந்து விசாரித்து வருகிறார். 

Related Stories: