×

தண்டராம்பட்டு அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

தண்டராம்பட்டு, மார்ச் 8: தண்டராம்பட்டு அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலியானான். தண்டராம்பட்டு அடுத்த கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன்(48), மேஸ்திரி. இவரது மகன் உதயகுமார்(7). அரசு தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சிறுவன் உதயகுமார் அதே பகுதியில் உள்ள ஏரியில் மற்ற சிறுவர்களுடன் குளித்துள்ளான். அப்போது, சேற்றில் சிக்கி மூச்சுத் திணறினார். இதைக்கண்ட மற்ற சிறுவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உதயகுமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Thandarambattu ,
× RELATED ஏரியில் மீன் குஞ்சுகளை விட அனுமதிக்க...