மொபட் திருடிய 2 சிறுவர்கள் கைது

வேட்டவலம், மார்ச் 8: வேட்டவலம் அருகே மொபட் திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். வேட்டவலம் அடுத்த வைப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன்(31). கடந்த 4ம் தேதி இவர் தனது மொபட்டை வீட்டில் நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்தபோது மொபட் திருட்டு போனது தெரியவந்தது, இதுகுறித்து பூமிநாதன் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் பகுதியில் எஸ்ஐ விஸ்வநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் மொபட்டில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ேதனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், சங்கராபுரம் தாலுகா எல்.என்.பட்டி கிராமத்ைத சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது பூமிநாதனுக்கு சொந்தமான மொபட் என்பதும் தெரியவந்தது. உடனடியாக மொபட்டை பறிமுதல் செய்த போலீசார், சிறுவர்கள் 2 பேரையும் கைது செய்து கடலூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Related Stories: