மூதாட்டி தீக்குளித்து சாவு

உடன்குடி,மார்ச் 8: உடன்குடி வைத்தியலிங்கபுரம் சன்னதி தெருவைச்சேர்ந்தவர் மாயாண்டி மனைவி மாரியம்மாள் (63). கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு மாயாண்டி இறந்து விட்டார். மாரியம்மாள் மட்டும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி வெளியே சுற்றி சுற்றி வருவது வழக்கம். கடந்த 6ம் தேதி இரவு தனியாக வீட்டில் இருந்த மாரியம்மாள் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி உடலை கைப்பற்றி பிரேத விசாரணைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து மாரியம்மாள் மகன் சரவணன் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: