(வேலூர்) 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் படம் உள்ளது

பேரணாம்பட்டு, மார்ச் 8: பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த கோலத்தில் நமது உரிமை ஓட்டு உரிமை என்ற வாசகம் குறிப்பிட்டு 100 சதவீதம் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். இதில், நகராட்சி ஆணையர் பாலாஜி, நகராட்சி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

Related Stories: