கோவில்பட்டி சூசையப்பர் ஆலயத்தில் தவக்கால தியானம்

கோவில்பட்டி, மார்ச் 8: கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் தவக்கால தியானம் நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு இறைபுகழ்ச்சி பாடலுடன் தொடங்கி 11 மணிக்கு விசுவாசஆரோக்கியராஜ் அடிகளார் தியான உரை நிகழ்த்தினார். தொடர்ந்து 12.30 மணிக்கு குருகுல முதல்வர் குழந்தைராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. மதியம் 2.30 மணிக்கு சிலுவை பாதை நன்றி திருப்பலியுடன் நிறைவுபெற்றது. இதில் பாளை மறைமாவட்டத்தை சேர்ந்த அனைத்து வின்சென்ட்தே பவுல் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சூசையப்பர் திருத்தல பங்கு தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்கு தந்தை ஜேக்கப் மற்றும் பாளை மத்திய சபை நிர்வாகிகள், கோவில்பட்டி புனித வின்சென்ட்தே பவுல் சபையினர் செய்திருந்தனர்.

Related Stories: