பேராசிரியர் அன்பழகனுக்கு அஞ்சலி

சேலம், மார்ச் 8: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவையொட்டி, மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சண்முகபுரம் கிளைக்கழக அவைத்தலைவர் ரகுநாதபிள்ளை, கிளை செயலாளர் கதிரவன் முன்னிலையில் பேராசிரியர் திருவுருவ படத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலு மா.வீரப்பன், மொழிப்போர் தியாகி, மாவட்ட மாணவரணி கண்ணன், ராஜேந்திரன், ரவி, ராஜ்மோகன், மதியழகன், வெங்கடேஷ், குமார், கோபால், கதிரேசன், மாணிக்கம், செந்தில், ஹரிசக்திவேல் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.

Related Stories: