சூளகிரி, பர்கூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 8: கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 10ம் தேதி காலை 11 மணிக்கு சூளகிரி தாலுகா அலுவலகத்தில், ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் தலைமையிலும், வரும் 17ம் தேதி காலை 11 மணிக்கு பர்கூர் தாலுகா அலுவலகத்தில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை, அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் அளித்து பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: