×

அன்பழகன் மறைவையொட்டி திமுகவினர் இரங்கல் ஊர்வலம்

கடலூர், மார்ச் 8:  தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கடலூரில் நேற்று காலை தி.மு.கவினர் மவுன ஊர்வலம் நடத்தினர். கடலூர்  தந்தை பெரியார் சிலையருகில் துவங்கிய இந்த ஊர்வலத்தில் திரளான தி.மு.கவினர் பங்கேற்றனர். நகர செயலாளர் ராஜா தலைமையிலும், மாநில தேர்தல் பணிக்குழு செயலர் இள.புகழேந்தி முன்னிலையிலும் இரங்கல் ஊர்வலம் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், தொ.மு.ச பழனிவேல், மாணவரணி நடராஜன், மீனவரணி தமிழரசன், நகர பொருளாளர் சலீம், நகர துணைச் செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அஞ்சாபுலி, மாவட்ட பிரதிநிதிகள் கோவலன், ரங்கநாதன், கணேசன், ராமு  உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் தி.மு.க அலுவலகத்தில் நிறைவு பெற்றது. அங்கு பேராசிரியரின் திருவுருவ படத்திற்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர். தி.மு.க கொடிகள் அனைத்தும் அரை கம்பங்களில் பறந்தன.  

 பண்ருட்டி: பண்ருட்டி அருகே தொரப்பாடியில் நகர திமுக சார்பில் நகர செயலாளர் சுந்தரவடிவேல் தலைமையில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவையொட்டி அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி ராகவன், ஒன்றிய பிரதிநிதி சுப்ரமணி, முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ், இளைஞரணி அமைப்பாளர் மோகன், நிர்வாகிகள் ஹைதர்அலி, குமார், பன்னீர்செல்வம், வார்டு செயலர்கள் தேவநாதன், ரவிச்சந்திரன், அப்பர்சாமி, பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் பண்ருட்டி நகர திமுக சார்பில் நகர செயலாளர் ராசேந்திரன் தலைமையில் அன்பழகன் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் பொருளாளர் ராமலிங்கம், இளைஞரணி சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

 சிதம்பரம்: மறைந்த திமுக பொதுச்செயலாளர்  பேராசிரியர் அன்பழகன், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்  கழகத்தில்தான் தனது பட்டப்படிப்பை படித்து முடித்தார். இந்நிலையில்  அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள அண்ணாமலைநகரில், நகர திமுகவினர்  நேற்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்தி  எதிர்ப்பு  போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக முன்னாள்  மாணவரும், தியாகியுமான ராஜேந்திரன் சிலை முன், பேராசிரியர் அன்பழகனின்  திருவுருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து அஞ்சலி  செலுத்தப்பட்டது. அண்ணாமலைநகர் திமுக நகர செயலாளர் முத்துக்குமார்,  பொருளாளர் பழனி, நிர்வாகிகள் அன்பரசு, ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கச்சேரி சாலையில் இரங்கல் கூட்டம் நடந்தது. திமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் சண்முகம், அவை தலைவர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், நகர செயலாளர் கணேசமூர்த்தி மற்றும் குமராட்சி ஒன்றிய செயலாளர் சோழன், லால்பேட்டை நகர செயலாளர் ஹாஜா மொகைதீன், காங்கிரஸ் கட்சி அன்வர், ஜாகீர் உசேன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பன்னீர்செல்வம், செந்தில்குமார், புரட்சிகர சோஷலிஸ்ட் மைனர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரகாஷ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சபிக்குர் ரகுமான்,  முகமது ஆசிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் 5 மணிநேரம் வர்த்தகர்கள் கடையடைப்பு செய்தனர்.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி