நெய்வேலி, மார்ச் 8: வடலூரில், தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடலூர் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்பரசி வரவேற்றார். என்எல்சி சமூக பொறுப்புணர்வு தலைமை பொது மேலாளர் மோகன், ஏரிஸ் கலை கல்லூரி முதல்வர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்து பேசுகையில். தாய்க்கு பிறகு தாய்மொழியை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். மாவட்ட ஆட்சியராக பதவியில் இருக்கும் நான், தமிழ் வழி கல்வியில் பயின்று உயர்ந்து மாவட்ட ஆட்சியராக வந்துள்ளேன்.