மாமூல் கேட்டு கொலை மிரட்டல்

நெய்வேலி, மார்ச் 8: நெய்வேலி கீழ் வடக்குத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் திருசங்கு மகன் குமார்(37). இவர் வடக்குத்து கிராம நிர்வாக அலுவலகம் எதிரே மீன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த காட்டுக்கூடலூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சச்சிதானந்தம்(25) என்பவர், குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தர மறுக்கவே, கத்தியை அவரது கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து குமார், நெய்வேலி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த சச்சிதானந்தத்தை கைது செய்தார்.

Related Stories: