×

மணல் கடத்திய லாரி பறிமுதல்

வேப்பூர், மார்ச் 8: வேப்பூர் கூட்ரோட்டில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் எஸ்ஐ சக்தி கணேஷ், சிறப்பு எஸ்ஐ கலியமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது கும்பகோணத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற லாரியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் இருந்து இறங்கிய டிரைவர் திடீரென அங்கிருந்து காட்டு பகுதிக்குள் தப்பி ஓடினார். இதையடுத்து லாரியை போலீசார் சோதனை செய்தபோது, அனுமதியின்றி எட்டு யூனிட் அளவுள்ள மணல் ஏற்றப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இது தொடர்பாக லாரி டிரைவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொடிபள்ளம் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து மகன் வெங்கடேசன்(44) மற்றும் லாரி உரிமையாளர் ஆனந்த் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது