சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் நடக்கும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் ‘கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் பல இடங்களில் நடக்கும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் குறித்த சரியான விபரங்கள் அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களிடம் இருக்கிறதா?, இவ்விபரங்கள் தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா?, இதனை முறைப்படுத்த வேண்டாமா? அரசு இதனை முறையாகக் கண்காணிக்க வேண்டும்’ எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
