திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் எல்லைக்குட்பட்ட அத்தங்கிகாவனூர் பகுதியில் விவசாயி கோபால் நாயுடு(76) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகை,ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
