அரசு மருத்துவமனைகளில் கொசுத் தொல்லை அதிகரிப்பு

வருசநாடு, மார்ச் 8: கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, வருசநாடு ஆகிய ஊர்களில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான புறநோயாளிகள் தினசரி சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இவைகள் நோயாளிகளை கடிப்பதால், அவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் தங்கியிருக்கும் அறைகளில் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். எனவே, அரசு மருத்துவமனைகளில் கொசுக்களை ஒழிக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: