ரூ.2 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் கம்பத்தில் 3 பேர் கைது

கம்பம், மார்ச் 8: கம்பத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். கம்பத்தில் மெட்டுச்சாலையில் உள்ள பெட்ரோல் பல்க் அருகே, கம்பம் வடக்கு சப்இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது சரக்கு ஆட்டோவில் 5 சாக்கு மூட்டைகளில் 2 ஆயிரம் பண்டல்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வேனில் இருந்த கம்பமெட்டு காலனியைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள் ஜாபர் அலி (37), பிச்சையத்தா (55) மற்றும் ஆட்டோ டிரைவர் சரவணன் (36) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: