திருப்பூர், மார்ச் 8: திருப்பூர், அம்மாபாளையம் பகுதியில் திருமணத்திற்கு வரன் தேடி வந்த நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், அம்மாபாளையம், ராக்கியாபாளையம் ரோடு, கணபதி நகரை சேர்ந்தவர் பழனிசாமி, இவரது மகள் பூமணி(20). இவர் படித்து வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு பெற்றோர்கள் வரன் தேடி வந்தனர். ஆனால் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இதற்கு பூமணி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பூமணி மன உளைச்சலில் இருந்துள்ளார்.