×

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர், மார்ச் 8: திருப்பூர், அம்மாபாளையம்  பகுதியில் திருமணத்திற்கு வரன் தேடி வந்த நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், அம்மாபாளையம், ராக்கியாபாளையம் ரோடு, கணபதி நகரை சேர்ந்தவர் பழனிசாமி, இவரது மகள் பூமணி(20). இவர் படித்து வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு பெற்றோர்கள் வரன் தேடி வந்தனர். ஆனால் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இதற்கு பூமணி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பூமணி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த பூமணி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் திருமுருகன் பூண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த திருமுருகன் பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு