×

கோயிலில் மணி திருடிய தவெக நிர்வாகி கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாப்பாத்தி அம்மன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பொருத்தப்பட்டுள்ள மணிகள் தொடர்ந்து திருடப்பட்டது.  இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மொபட்டில் வந்த மர்ம நபர் வாகனத்தை நிறுத்தி கோயில் மணியை கட்டிங் பிளேடு, சுத்தியலால் தட்டிக் கொண்டு சென்றுள்ளார்.

உடனே கோயில் பூசாரி அவரை பிடித்து, குரிசிலாப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணை யில் அவர் ஆண்டியப்பனூர் ஊராட்சி கிளை தவெக நிர்வாகியான ஏ.எஸ்.குமார்(48) என்பது தெரியவந்தது. மாலை நேரங்களில் கோயிலுக்கு வந்து மணி மற்றும் பித்தளை பொருட்களை திருடிச்சென்று விற்றதும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் ஏ.எஸ்.குமாரை கைது செய்தனர். இதுகுறித்து எஸ்பி தனிப்படை போலீசார் கூறுகையில், ‘ஏ.எஸ்.குமார் போதையில் இதேபோல் 3 மணிகளை திருடியது தெரியவந்தது. கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் அளித்தார்’ என்றனர்.

Tags : Thaveka ,Tirupattur ,Papathi Amman ,Andiyappanur ,Hindu Religious and Endowments Department ,
× RELATED அதிமுக ஒன்றிய துணை செயலாளர் கைது